கதாநாயகன், வில்லன் என, இரு வேடங்களில் கமல் நடித்த படம், "ஆளவந்தான்! கமல் எழுதிய, "தாயம் என்ற கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் ஒரு சண்டைக் காட்சி, "கிராபிக்ஸ் முறையில், வித்தியாசமாக படமாக்கப் பட்டிருந்தது. இது, "ஹாலிவுட் இயக்குனர் குவென்டைன் டிரன்டினோ என்பவரை மிகவும் கவர்ந்து விட்டது. கமலை வெகுவாக பாராட்டிய அவர், 2014ல் தான் இயக்கவுள்ள படத்தில், ஆளவந்தானில் இடம் பெற்றது போன்ற ஒரு சண்டைக் காட்சியை, அதே பாணியில் உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment