"கூத்து, சரவண பொய்கை படங்களில் நடித்து வரும், "வெளுத்துக்கட்டு அருந்ததி, தமிழ் கதாநாயகர்களில், விக்ரம் தான் தனக்கு பிடித்தமானவர் என்கிறார். "காசி, அந்நியன், தெய்வத்திருமகன் போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பு, என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. அதிலிருந்து நான், விக்ரமின் ரசிகையாகி விட்டேன் எனச் சொல்லும் அருந்ததிக்கு, விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. ஒரு ரசிகையாய் இருந்தாலே போதும் என்கிறார். அவரிடத்தில், ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகை என, வெளிப்படையாக சொல்வதால், மற்ற நடிகர்கள் உங்களை கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்றால், "அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என் மனதில் பட்டதை சொன்னேன். மேலும், விக்ரம் நல்ல நடிகர் என்பது, அனைவருக்கும் தெரிந்தது தானே என்றும் சொல்கிறார், அருந்ததி.
No comments:
Post a Comment