கார்த்தியின் நடிப்பில் உருவாகும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில், அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கின்றார்.அலெக்ஸ் பாண்டியன் படத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், அனுஷ்கா இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து அவர் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பிற்கு வருவார் என்று எதிர்பாத்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இரண்டாம் உலகம் படத்துக்கு கூடுதல் நாட்கள் வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவன் வற்புறுத்தியதால் இங்கு வரமுடியவில்லையாம். இதனால் அலெக்ஸ் பாண்டியன் படக் குழுவினர் அனுஷ்கா மேல் கோபத்தில் உள்ளனர்.
ஆனால் அனுஷ்கா தரப்பில் தாமதத்துக்கு அவர் காரணம் அல்ல என மறுக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அவர் ஒதுக்கிய திகதிகளை விரயமாக்கி விட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகள் உட்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், அனுஷ்கா இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து அவர் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பிற்கு வருவார் என்று எதிர்பாத்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இரண்டாம் உலகம் படத்துக்கு கூடுதல் நாட்கள் வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவன் வற்புறுத்தியதால் இங்கு வரமுடியவில்லையாம். இதனால் அலெக்ஸ் பாண்டியன் படக் குழுவினர் அனுஷ்கா மேல் கோபத்தில் உள்ளனர்.
ஆனால் அனுஷ்கா தரப்பில் தாமதத்துக்கு அவர் காரணம் அல்ல என மறுக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அவர் ஒதுக்கிய திகதிகளை விரயமாக்கி விட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகள் உட்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment