தன்னை பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தம்பி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சரவணன் என்ற இளைஞருக்கு நடிகைகளிடம் தர்ம அடி கிடைத்துள்ளது.
நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் சோனாவிடம்தான் இந்த இளைஞர் சிக்கி அடி வாங்கியுள்ளார்.
இந்த இளைஞர் முதலில் பிரபல மால் ஒன்றில் வேலை பார்த்தவராம். எப்படியோ அவர் சூர்யா- கார்த்தி அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.
சூர்யா, கார்த்தி பெயரைச் சொல்லி திரையுலகில் இருப்பவர்களின் கைபேசி எண், சமூக வலைதளங்களில் நட்பு எனப் பெற்று அதை தவறாக பயன்படுத்தி வந்தாராம்.
'என்ன பாக்கனும்னா என் அண்ணனுங்க அலுவலகத்துக்கு வாங்க. நான் அங்க தான் இருப்பேன்' என்று கூறி அனைவரையும் நம்ப வைத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சோனியா அகர்வாலை பார்ட்டியில் தற்செயலாக சந்தித்த சரவணன், அவரிடம் ஏதோ தவறாகக் கூறியிருக்கிறார். அவர் தமிழில் பேசியதால் புரிந்து கொள்ளாத சோனியா, அதை சக நடிகை சோனாவிடம் அதை அப்படியே ஒப்பிக்க, சோனாவோ டென்ஷனாகி சரவணனை போட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது.
சரவணன் கூறியதன் அர்த்தத்தை சோனா விளக்க சோனியா அகர்வாலும், அவரது தம்பியும் ஹோட்டலில் அனைவர் முன்னிலையிலும் சரவணனை புரட்டியெடுத்துவிட்டார்களாம்.
ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்து சூர்யா, கார்த்திக்கு தகவல் சொன்ன பிறகு, கொஞ்ச நேரத்தில் சண்டை சமாதானமானதாம்.
No comments:
Post a Comment