Monday 23 July 2012

முக்கிய சேனலை பகைத்துக் கொண்ட அமீர்?



  


       அமீர் என்றாலே சர்ச்சைதான் போலிருக்கிறது. ஃபெப்ஸி பிரச்சனையில் வாளெடுத்துசுழற்றாத குறையாக பலரையும் அதிர வைத்துக் கொண்டிருக்கும் அவர் சைலண்டாக இன்னொரு காரியத்தையும் செய்து குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்றின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார்.

ஒரு பிரபல தொலைக்காட்சியில் முஸ்லீம்கள் பர்தா அணிவது சவுரியமா, அசவுகர்யமா என்றொரு விவாத அரங்கம் நடக்கவிருந்தது. இதை கேள்விப்பட்ட அமீர், முஸ்லீம் பிரமுகர்கள் சிலரை சந்தித்து இப்படியெல்லாம் நடக்கிறதே இதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா என்று கூற, பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட சேனலை ரவுண்டு கட்டி நிகழ்ச்சியையே நிறுத்திவிட்டார்கள்.

சேனல் சும்மாயிருக்குமா? இனி அமீர் தொடர்பான எந்த நிகழ்ச்சியும் நம்ம சேனலில் வரக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment