ரதன் சந்திரசேகர் இயக்கும் படம், "என் பெயர் குமாரசாமி! புதுமுகங்கள்நடிக்கும் இந்தப் படத்தில், படுக மொழி பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதை, படுக இனத்தின் முதல் பட்டதாரியான சாந்தி தேசிங்கு பாடியுள்ளார். இதே படத்தில், "வனப்புடை மகளிர் சொல்லும் என்றொரு சித்தர் வடிவ பாடலை, நடிகர் பார்த்திபன் பாடி உள்ளார். இது சினிமாவில் அவர் பாடும் முதல் பாடல். பார்த்திபனின் குரலும், தமிழ் உச்சரிப்பும் மிகத் தெளிவாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே, இந்தப் பாடலை அவரை பாட வைத்தேன், எனச் சொல்கிறார் இயக்குனர்.
No comments:
Post a Comment