Tuesday 24 July 2012

திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு மீண்டும் திடீரென மறுக்கும் சோனா.


எந்த ஒரு பார்ட்டியாக இருந்தாலும் சரி, அங்கு தவறாமல் ஆஜாராகி விடும் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சோனா.

சமீபத்தில் சோனா - எஸ்.பி.சரண் இருவருக்குமான சண்டை உலகம் அறிந்ததே. அதற்குப் பிறகு வெங்கட்பிரபு, பிரேம்ஜி என இருவருடன் பழகுவதை குறைத்துக் கொண்டார் சோனா. சமீபத்திய சோனாவின் பிறந்த நாள் பார்ட்டியில் பிரேம்ஜி கலந்து கொண்டார்.

பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்ட தனது பிறந்த நாள் பார்ட்டி புகைப்படங்களை தனது பேஸ்ஃபுக் இணையத்தில் வெளியிட்டு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தினார் சோனா.

"எனக்கு ஆண்களோடு வாழப் பிடிக்காது " என முன்னர் தத்துவ மழை பொழிந்தவர், தற்போது தனது பேஸ்புக்கில் அள்ளித் தெளித்திருக்கும் ஸ்டேட்டஸ் மெசேஜ் பலரை இப்போது திக்குமுக்காடச் செய்தது.

ஆம்.. சோனாவுக்கு திருமண ஆசை வந்து விட்டதாம். தனது பேஸ்புக் இணையத்தில் " விவாகரத்தான, அழகான, புத்திசாலியான ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. என்னை நன்றாக புரிந்து கொள்பவராகவும் அவர் இருக்க வேண்டும்.. சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறேன் " என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது அடுத்த ஸ்டேட்டஸாக " மன்னிக்கவும்... நண்பர்களாக விளையாட்டிற்காக அவ்வாறு செய்து விட்டார்கள். எனக்கு திருமணத்தில் எல்லாம் விருப்பம் இல்லை. வரும் காலத்திலும் திருமணத்தில் எனக்கு அந்த மாதிரி எண்ணம் வராது என்றே நினைக்கிறேன்... ஆகவே மன்னிக்கவும். என்னுடைய பழைய மெசேஜை அழித்து விட்டேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

ம்ம்ம்... பேஸ்புக் இணையத்தில் அப்டேட் செய்யும் போது என்ன மனநிலையில் இருந்தார்களோ?

No comments:

Post a Comment