தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரின் சம்பளத்தினை அடுத்து கிட்டதட்ட ஒரே அளவு சம்பளம் வாங்கும் வரிசையில் இருப்பவர்கள் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம்.. இந்த நால்வர் தான்.தற்போது ஐந்தாவதாக அவ்வரிசையில் கார்த்தியும் இணைந்து இருக்கிறார்.
'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்களில் மட்டுமே நடித்து இருப்பவர் எப்படி இந்த வரிசையில்? என்று பலரும் அதிசயிக்கிறார்கள்.
முதல் படமான 'பருத்தி வீரன்'ல் தனது அசாதாரண நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஆஸ்தான இடத்தினைப் பிடித்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' சரிவர மக்களிடம் எடுபடாமல், பத்தோடு பதினொன்றாக ஆனது.
'நான் மகான் அல்ல' படம் "பக்கத்து வீட்டு பையன் போலவே இருக்கான் இல்ல...!" என்று பேச வைத்தது.'பையா','சிறுத்தை' ஆகிய இருபடங்கள்தான் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் கார்த்தி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.
அதிலும் 'சிறுத்தை' ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் வசூலை வாரி இறைத்தது.ஒன்றரை வருடங்கள் கழித்து வெளியான 'சகுனி' படம் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், கார்த்தியின் தேதிகள் கேட்டு போய் இருக்கிறார்.அவரது தேதிகள் கிடைத்தால் போதும் சம்பளம் 14 கோடி என்று கூறி இருக்கிறார்.
அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் என இவர்கள் போராடி மேலே வந்தபின் அடைந்த சம்பளத்தை, வெறும் ஆறே படங்களில் நெருங்கி விட்டார் கார்த்தி என்கிறது கோலிவுட்.
'சகுனி' உருட்டி விட்டாலும், 'அலெக்ஸ் பாண்டியன்' மிரட்டும் என காத்திருக்கிறார்கள் கார்த்தி ரசிகர்கள்.
'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்களில் மட்டுமே நடித்து இருப்பவர் எப்படி இந்த வரிசையில்? என்று பலரும் அதிசயிக்கிறார்கள்.
முதல் படமான 'பருத்தி வீரன்'ல் தனது அசாதாரண நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஆஸ்தான இடத்தினைப் பிடித்தார். 'ஆயிரத்தில் ஒருவன்' சரிவர மக்களிடம் எடுபடாமல், பத்தோடு பதினொன்றாக ஆனது.
'நான் மகான் அல்ல' படம் "பக்கத்து வீட்டு பையன் போலவே இருக்கான் இல்ல...!" என்று பேச வைத்தது.'பையா','சிறுத்தை' ஆகிய இருபடங்கள்தான் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் வரிசையில் கார்த்தி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்து இருக்கிறது.
அதிலும் 'சிறுத்தை' ஏ, பி, சி என மூன்று சென்டர்களிலும் வசூலை வாரி இறைத்தது.ஒன்றரை வருடங்கள் கழித்து வெளியான 'சகுனி' படம் மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், கார்த்தியின் தேதிகள் கேட்டு போய் இருக்கிறார்.அவரது தேதிகள் கிடைத்தால் போதும் சம்பளம் 14 கோடி என்று கூறி இருக்கிறார்.
அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் என இவர்கள் போராடி மேலே வந்தபின் அடைந்த சம்பளத்தை, வெறும் ஆறே படங்களில் நெருங்கி விட்டார் கார்த்தி என்கிறது கோலிவுட்.
'சகுனி' உருட்டி விட்டாலும், 'அலெக்ஸ் பாண்டியன்' மிரட்டும் என காத்திருக்கிறார்கள் கார்த்தி ரசிகர்கள்.
No comments:
Post a Comment