சின்னத்திரையில் கால்பதித்து, இப்போது பெரிய திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் ஹீரோவாக அவதரித்த அவர், தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்தார். இப்போது தனுஷ் தயாரிக்கும் ஒருபடம், பசங்க பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவரை சந்தித்தபோது அவர் நம்மிடம் பேசியதாவது, சினிமாவில் எனக்கு கிடைத்த இந்த இடம் மிகப்பெரியது. 3 படத்தில் தனுஷூன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. என்னுடைய காமெடி சென்ஸை புரிந்து கொண்டு சரியாக பயன்படுத்த நினைப்பவர். படம் ஆரம்பிக்கும் முன்பாக என்னிடம் என்ன கதை சொன்னார்களோ, அதை அப்படியே படமாக எடுத்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய ப்ரீடம் கொடுத்தாங்க. தனுஷ் அடுத்து தயாரிக்கும் புதிய படத்தில் நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இப்போது என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜின் படத்தில் விமல் கூட கேடி பில்லா கில்லா ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறேன். நான் பிறந்து, ஓடி, ஆடி விளையாடிய திருச்சியில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட்டிங்கில் பங்கேற்கும் போது அப்படியே எனது பழைய நினைவுகள் வருது. விமல் கூட முதன்முறையாக நடிக்கிறேன். எல்லோரும் யார் பில்லா, யார் கில்லாடி ரங்கா என்று கேட்கின்றனர். ஆனால் அது சஸ்பென்ஸ். நிறைய பேர் மீடியாவுல நான் சரியா பேசுறது இல்லை என்று சொல்றாங்க. நம்ப மாட்டீங்க, நான் ஷூட்டிங் முடித்து என் செல்போனை பார்த்தால் நிறைய மிஸ்ட்கால் இருக்கும். இதுல யாருக்கு போன் பண்ணுவேன். இந்தநிலையை தவிர்க்க எட்டு வருஷமா நான் வச்சிருந்த என் போன் நம்பரை இப்போ மாற்றிவிட்டேன். எனது புது நம்பரை எல்லோருக்கும் கொடுத்து பேசிக்கொண்டு இருக்கேன். இனி யார் எப்ப என்ன கேட்டாலும் தவிர்க்காம உடனே பதில் சொல்வேன் என்னை நம்புங்க என்று அழாத குறையா சொல்லி முடித்தார் சிவ கார்த்திகேயன்.
Monday 13 August 2012
மீடியாவுக்காக செல்போன் நம்பரை மாற்றிய சிவ கார்த்திகேயன்...!
சின்னத்திரையில் கால்பதித்து, இப்போது பெரிய திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் ஹீரோவாக அவதரித்த அவர், தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்தார். இப்போது தனுஷ் தயாரிக்கும் ஒருபடம், பசங்க பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவரை சந்தித்தபோது அவர் நம்மிடம் பேசியதாவது, சினிமாவில் எனக்கு கிடைத்த இந்த இடம் மிகப்பெரியது. 3 படத்தில் தனுஷூன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. என்னுடைய காமெடி சென்ஸை புரிந்து கொண்டு சரியாக பயன்படுத்த நினைப்பவர். படம் ஆரம்பிக்கும் முன்பாக என்னிடம் என்ன கதை சொன்னார்களோ, அதை அப்படியே படமாக எடுத்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய ப்ரீடம் கொடுத்தாங்க. தனுஷ் அடுத்து தயாரிக்கும் புதிய படத்தில் நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இப்போது என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜின் படத்தில் விமல் கூட கேடி பில்லா கில்லா ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறேன். நான் பிறந்து, ஓடி, ஆடி விளையாடிய திருச்சியில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட்டிங்கில் பங்கேற்கும் போது அப்படியே எனது பழைய நினைவுகள் வருது. விமல் கூட முதன்முறையாக நடிக்கிறேன். எல்லோரும் யார் பில்லா, யார் கில்லாடி ரங்கா என்று கேட்கின்றனர். ஆனால் அது சஸ்பென்ஸ். நிறைய பேர் மீடியாவுல நான் சரியா பேசுறது இல்லை என்று சொல்றாங்க. நம்ப மாட்டீங்க, நான் ஷூட்டிங் முடித்து என் செல்போனை பார்த்தால் நிறைய மிஸ்ட்கால் இருக்கும். இதுல யாருக்கு போன் பண்ணுவேன். இந்தநிலையை தவிர்க்க எட்டு வருஷமா நான் வச்சிருந்த என் போன் நம்பரை இப்போ மாற்றிவிட்டேன். எனது புது நம்பரை எல்லோருக்கும் கொடுத்து பேசிக்கொண்டு இருக்கேன். இனி யார் எப்ப என்ன கேட்டாலும் தவிர்க்காம உடனே பதில் சொல்வேன் என்னை நம்புங்க என்று அழாத குறையா சொல்லி முடித்தார் சிவ கார்த்திகேயன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment