சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்த சந்தானம் இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். தனது காமெடி நடிப்பின் மூலம் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்று விட்டார். தற்போது தயாரிப்பாளராக உயர்வு பெற்றுள்ள சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை இராம.நாராயணனுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
சந்தானம் - பவர் ஸ்டார் கூட்டணியில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக குத்துப் பாட்டு ஒன்றுக்கு சந்தானம் ஆட்டம் போட்டுள்ளார். அவருடன் இணைந்து பிடிச்சிருக்கு கதாநாயகி விஷாகா சிங்கும் ஆடியுள்ளார். தமன் இசையில் இந்த பாட்டு பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை, என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment