‘நடிகர் ராணாவை காதலிக்கிறேன், அவரை மணந்துகொள்ளப்போகிறேன்' என்று அடிக்கடி வதந்திகள் வெளியாகிறது. நாங்கள் இருவரும் கடந்த 10 வருடமாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். வதந்திகள்பற்றி நான் கவலைப்படுவதில்லை. திருமணத்துக்கு இன்னும் நான் தயாராகவில்லை. எனக்கேற்ற காதலனுக்காக காத்திருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது வாழ்க்கையின் புது அத்தியாயமாகும். அதற்கு அவசரப்படக்கூடாது. திருமண பந்தம் எனக்காக காத்திருக்கும்.
இப்போது விஷால், ஜீவா, ஜெயம் ரவியுடன் படங்களில் நடிக்கிறேன். இதுதவிர சில தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கவுதம் மேனன் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா', பிரபு தேவா இயக்கிய ‘நு ஒஸ்தானன்டே நேன் ஒத்தன்டானா' ஆகிய படங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் பெயரைச் சொல்லி இன்றும் என்னை நிறைய பேர் அழைக்கிறார்கள். இவ்வாறு த்ரிஷா கூறினார்.
No comments:
Post a Comment