தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் படங்களில் நடிக்க நடிகைகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆண்டுதோறும் புதிதாக வெளிவரும் தீபாவளி விளம்பரங்களில் அந்த ஆண்டு முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் முன்னணி நடிகைகளைக் கொண்டே விளம்பரங்கள் தயாரிக்க விரும்பும்.
கடந்த ஆண்டு, அமலா பால், ரிச்சா கங்கோபாத்யா, டாப்ஸி ஆகியோர் முன்னணியில் இருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அசினும், தமன்னாவும், த்ரிஷாவும் விளம்பரத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள். அதேபோல லட்சுமிராயும் விளம்பரங்களில் மின்னிக் கொண்டிருக்கிறார். சினேகா சிறு நிறுவனங்களின் விளம்பரத்தில்கூட நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஹன்சிகாவும், காஜல் அகர்வாலும், ப்ரணிதாவும். சமந்தாவும் களத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டும் அமலாபாலின் ஆதிக்கம் தொடர்கிறது. அஞ்சலிக்கும் விளம்பர உலகில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. அனுஷ்கா தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
நடிகைகள் விளம்பர படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம். குறைந்த உழைப்பு நிறைய சம்பளம் என்ற தாரக மந்திரம்தான். ஒரு விளம்பர படத்தில் நடிக்க அதிக பட்சம் நான்கு நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும், அதற்கு ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளம் கிடைக்கும், அடிக்கடி தொலைக்காட்சியில் விளம்பரங்கள் இடம்பெறுவதால் மக்களின் மனதில் முகமும் நன்றாக பதிந்துவிடும். யார் முக்கிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கிறார்களோ அவர்கள்தான் நம்பர் ஒன் என்ற இமேஜும் இருக்கிறது.
தென்னிந்தியாவை பொறுத்தவரை அசின், த்ரிஷா, அனுஷ்கா முன்னணியில் இருக்கிறார்கள், இவர்கள் மூவருமே ஒப்பந்த அடிப்படையில் கோடிக் கணக்கில் சம்பளம் பெறுகிறவர்கள். பாலிவுட்டை பொறுத்தவரையில் ஐஸ்வர்யாராய் முதல் இடத்தில் இருந்தார். இப்போது அந்த இடத்தை பிரியங்காக சோப்ரா பிடித்து ஐஸ்வர்யாவை இரண்டாவது இடத்துக்கு தள்ளியிருக்கிறார். இவர்களின் சம்பளத்தை சொன்னால் மயக்கம் வரும்.
கடந்த ஆண்டு, அமலா பால், ரிச்சா கங்கோபாத்யா, டாப்ஸி ஆகியோர் முன்னணியில் இருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அசினும், தமன்னாவும், த்ரிஷாவும் விளம்பரத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள். அதேபோல லட்சுமிராயும் விளம்பரங்களில் மின்னிக் கொண்டிருக்கிறார். சினேகா சிறு நிறுவனங்களின் விளம்பரத்தில்கூட நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஹன்சிகாவும், காஜல் அகர்வாலும், ப்ரணிதாவும். சமந்தாவும் களத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டும் அமலாபாலின் ஆதிக்கம் தொடர்கிறது. அஞ்சலிக்கும் விளம்பர உலகில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. அனுஷ்கா தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
நடிகைகள் விளம்பர படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம். குறைந்த உழைப்பு நிறைய சம்பளம் என்ற தாரக மந்திரம்தான். ஒரு விளம்பர படத்தில் நடிக்க அதிக பட்சம் நான்கு நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும், அதற்கு ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளம் கிடைக்கும், அடிக்கடி தொலைக்காட்சியில் விளம்பரங்கள் இடம்பெறுவதால் மக்களின் மனதில் முகமும் நன்றாக பதிந்துவிடும். யார் முக்கிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கிறார்களோ அவர்கள்தான் நம்பர் ஒன் என்ற இமேஜும் இருக்கிறது.
தென்னிந்தியாவை பொறுத்தவரை அசின், த்ரிஷா, அனுஷ்கா முன்னணியில் இருக்கிறார்கள், இவர்கள் மூவருமே ஒப்பந்த அடிப்படையில் கோடிக் கணக்கில் சம்பளம் பெறுகிறவர்கள். பாலிவுட்டை பொறுத்தவரையில் ஐஸ்வர்யாராய் முதல் இடத்தில் இருந்தார். இப்போது அந்த இடத்தை பிரியங்காக சோப்ரா பிடித்து ஐஸ்வர்யாவை இரண்டாவது இடத்துக்கு தள்ளியிருக்கிறார். இவர்களின் சம்பளத்தை சொன்னால் மயக்கம் வரும்.
No comments:
Post a Comment