Thursday 5 July 2012

நயன்தாராவின் 6 வது விரல் பலி கொடுக்கப்பட்டதா ..? புதிய பரபரப்புத் தகவல் ..


பெண்களுக்கு இடது கையில் ஆறு விரல் இருந்தால் அவர்கள்தான் இந்த உலகத்தின்மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்கிறது ஜோதிடம். அப்படி கோடியில் ஒருவருக்குதான் அமையும் என்று மேலும் பீலா விடுகிறது அந்த ஆராய்ச்சி. அப்படி ஒரு அதிர்ஷ்டக்காரியாக பிறந்தவர்தான் நயன்தாராவும்.

நடிக்க வருவதற்கு முந்தைய வாரம் வரைக்கும் இந்த விரலை பொத்தி பொத்தி பொக்கிஷமாக கருதி வந்த நயன்தாரா, தனது புகழ் வெளிச்சத்துக்கு முதல் நரபலி கொடுத்தது அந்த அழகான அதிர்ஷ்ட விரலைதான்.

ஒரு வேளை அது இன்னும் அவரது கையில் ஒட்டிக் கொண்டு இருந்திருந்தால் சிம்புவுடனும், பிரபுதேவாவுடனும் பழகுவதற்கு முன்பே அவர்களை நன்றாக பிராண்டி வைத்து இரண்டு காதல் தோல்விகளிருந்து காப்பாற்றியிருக்குமோ என்னவோ?

அதுபோகட்டும்… இப்போது நயன்தாரா தனது பேச்சை அடக்கிக் கொண்டார். அல்லது சுருக்கிக் கொண்டார். ஆனால் பிரபுதேவா இப்போதுதான் மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறார். ‘எனது பிள்ளைகளுக்கு முன் காதல் எம்மாத்திரம்? அதனால்தான் அந்த காதலை கைகழுவ துணிந்தேன்’ என்று அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பிரபுதேவாவின் இந்த பதில் குறித்து நயன்தாராவை தொடர்பு கொண்ட மூத்த நிருபர் ஒருவருக்கு செம ரெஸ்பான்ஸ் அங்கிருந்து.
‘எதையாவது கேட்டு வாயப் புடுங்காதீங்க. நோ கருத்து’ என்று கூறிவிட்டார் நயன்.

No comments:

Post a Comment