அஜித் நடிப்பில் உருவான மங்காத்தாவில் நாயகிகளாக நடித்தவர்கள் திரிஷா, லட்சுமிராய். அந்த படத்தில் நடித்த போதே யார் சிறந்தவர்கள் என்ற போட்டி அவர்களுக்குள் எழுத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளித்தனர். அப்போது லட்சுமிராய், நான் தான் மங்காத்தா படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். எனக்கு பிறகுதான் திரிஷாவை தேர்வு செய்தனர். நான் விட்டுக் கொடுத்த கேரக்டரில்தான் த்ரிஷா நடித்தார் என்றார். ஆனால் த்ரிஷாவோ, லட்சுமிராய் கூறியது சில்லித்தனமானது. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கேரக்டரில் நடித்தோம் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஆனால் தற்போது இந்த தகராறுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இருவரும் சந்தித்து மனம்விட்டு பேசி சமரசமாகியுள்ளனர்.
சமீபத்தில் துபாய் படவிழாவுக்கு சென்றபோது அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் விருந்தில் இந்த சமரச சந்திப்பு நடந்துள்ளது. அப்போது இருவருக்கும் நெருக்கமான நடிகர்-நடிகைகள் உடன் இருந்தனர். இருவரும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து தோழிகளாக இருப்பது என்று கைகளை பற்றிக் கொண்டு நட்புணர்வை பரிமாறிக் கொண்டனர்.
No comments:
Post a Comment