Sunday 1 July 2012

நான் ஈ'. படத்திற்கு ஒரு காட்சியைக் கூட கட் பண்ணச் சொல்லாத சென்சார் அதிகாரிகள்.




      முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் என இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் 'நான் ஈ'.

பெரிய நாயகர்கள் யாருமின்றி ஒரு படம் இவ்வளவு எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருப்பது இதுவே முதல் முறை எனலாம். காரணம் இயக்குனர் ராஜமெளலி.

தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதைக்களத்தினை தேர்ந்தெடுக்கும் ராஜமெளலி இம்முறை ஒரு ஈயை நம்பி களம் இறங்குகிறார்.

'மஹாதீரா', 'மரியாதை ராமண்ணா' என்று வசூலில் இவரது படங்களின் சாதனை நான் ஈ படம் கண்டிப்பாக முறியடிக்கும் என்பது வல்லுனர்களின் கணக்கு.

அதற்கு அவர்கள் கூறும் காரணம் " படத்தின் டிரெய்லர், உருவான விதம் இந்த வீடியோக்களின் மூலமே ஒரு பெரிய ஒப்பனிங் இப்படத்திற்கு இருக்கும். கண்டிப்பாக அனைத்து தெலுங்கு படங்களின் வசூலையும் இப்படம் முறியடிக்கும் " என்கிறார்கள்.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ராம்கோபால் வர்மா " ஈகா படம் கண்டிப்பாக தெலுங்கு திரையுலகில் 100 கோடி வசூல் செய்யும் என்று நினைக்கிறேன். நான் கூறுவது தெலுங்கு திரையுலகில் மட்டும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். படத்தில் சில புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதால் தான் U/A சான்றிதழாம், மற்றபடி சென்சார் அதிகாரிகள் ஒரு காட்சியைக் கூட கட் பண்ணச் சொல்லவில்லையாம்.

' ஈ'  ஜுலை 6ம் தேதி வெள்ளித்திரையில் பறக்க இருக்கிறது.

No comments:

Post a Comment