Saturday 7 July 2012

குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்த ஊர்வசியுடன் செல்ல மகள் மறுப்பு.






நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வந்த நடிகை ஊர்வசியுடன் செல்ல அவருடைய மகள் குஞ்ஞாச்சா மறுத்து விட்டார். பிரபல நடிகை ஊர்வசிக்கும் நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குஞ்ஞாச்சா (12) என்ற மகள் இருக்கிறாள். ஊர்வசிக்கும் ஜெயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சென்னை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். ஜெயனிடம் குஞ்ஞாச்சா ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், மகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி கேரளாவில் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஊர்வசி வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஓணம், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், கோடை விடுமுறையில் 15 நாட்களும், 2வது சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் குஞ்ஞாச்சாவை ஊர்வசியுடன் அனுப்ப உத்தர விட்டது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஜெயன் வழக்கு தொடர்ந் தார். அதில், தனது மகளை ஊர்வசியுடன் அதிக நாட்கள் அனுப்ப முடியாது என கூறினார்.

சில தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 6ம் தேதி முதல் குஞ்ஞாச்சாவை ஒரு வாரம் ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது. மகளை எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஜெயன் அழைத்து வர வேண்டும் என்றும், அங்கிருந்து ஊர்வசி அவரை அழைத்து செல்லலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. இதன்படி, ஜெயன் தனது மகளை எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வந்தார். சிறிது நேரத்தில் ஊர்வசியும் அங்கு வந்தார்.

ஆனால், அவர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், விசாரணை நடந்தது. அப்போது, ஊர்வசியுடன் செல்ல விரும்பவில்லை என்று குஞ்ஞாச்சா கூறினார். இதையடுத்து, அவரை ஜெயனுடன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயன் அளித்த பேட்டியில், ‘‘ஊர்வசி குடிபோதையில் வந்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி கிடக்கிறார். இந்த உண்மையை மறைத்தேன். இப்போது, வேறு வழியின்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. அவர் போதை யில் வந்தது நீதிபதிக்கே தெரிந்ததால்தான், குஞ்ஞாச்சாவை என்னுடன் அனுப்ப உத்தரவிட்டார்’’ என்றார்.

No comments:

Post a Comment