Thursday 5 July 2012

சூர்யாவை சீண்டும் விக்ரம் ஒரு கோடீஸ்வர குழப்பம்


டிவியில தினமும் நம்ம முகம் வரும் அதனால் மக்கள் நாளைக்கு பாத்துக்கலாம்னுVikram - Suryaபோயிடுவாங்க. ஆனா சினிமா 6 மாசத்துக்கு அப்புறம்தான் வரும் அதனால் மக்கள் ஆர்வமா நான் நடிச்ச படத்தை பார்க்க வருவாங்க. (அப்படி வந்திருந்தா ராஜபாட்டை ஏங்ணா பட்டைய போட்டுகிச்சு?) என் நண்பர்களும் டிவி எனக்கு வேண்டாம்னு சொன்னாங்க அதான் அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன் என்று அரிய பெரிய விஷயம் ஒன்றை சொல்லி அனல் மூட்டியிருக்கிறார் விக்ரம்.
கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு முதலில் இவரைதான் அழைத்தார்களாம். அதை ஏன் இவர் வேண்டாம் என்றாராம்? அது பற்றிதான் இப்போது விரிவாக பேட்டியளித்து சூர்யாவின் ஏரியாவில் சூரைத் தேங்காய் உடைத்திருக்கிறார் விக்ரம். இந்த பேட்டி வந்த நாளில் இருந்தே செவாலியே சாலையின் குறுக்கு சந்து கொதி கொதிப்போடு காணப்படுகிறதாம்.
இருக்காதா பின்னே? சூர்யாவின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மினிஸ்டர் ரெகமன்டேஷன், மேயர் ரெகமன்டேஷன் என்று போட்டி நிலவிக் கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு வியாக்கியாயனம் விக்ரம் வாயிலிருந்து வந்தால் யாருக்குதான் எரிச்சல் வராது?

No comments:

Post a Comment