தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான கவுதம் மேனன், போட்டான் கதாஸ் ப்ரொடக்ஷ்ன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பும் செய்து வருகிறார். இவர் இப்போது தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராக பணிப்புரிந்த பிரேம் சாய் இயக்க, ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் சந்தானம், வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதேபடம் தெலுங்கிலும் கூரியர் பாய் கல்யான் என்ற பெயரிலும் தயாராகிறது. தெலுங்கில் உருவாகும் படத்தில் ஹீரோவாக இஷ்க் என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்த நிதின் நடிக்கிறார். பின்னணி பாடகர் கார்த்திக் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் குறித்து கவுதம் மேனன் கூறியுள்ளதாவது, இப்படத்தின் மைய கரு எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, மொழியையோ சார்ந்தது அல்ல. ஒர நல்ல ஜனரஞ்சகமான நகைச்சுவை, காதல், ஆக்ஷ்ன் என்ற கலவையுடன் பின்னப்பட்ட கதையாகும். இக்கதையை நான் கேட்டபோது பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டேன் என்று கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற இருக்கிறது.
No comments:
Post a Comment