Wednesday 4 July 2012

நயன் தாராவின் உண்மைக்காதல் கதையை படமாக எடுக்கும் சிம்பு?



சிம்புவின் மன்மதன் படம் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகத்தை 'மன்மதன்-2' என்ற பெயரில் எடுக்கிறார். இதற்கான கதையை அவரே உருவாக்கி உள்ளார்.

இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த படம் நயன்தாராவின் காதல் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர்.

பின்னர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கும் தயாரானார்கள். தற்போது அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த கதையை மன்மதன்-2 படத்தில் சிம்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
as

No comments:

Post a Comment