Saturday 7 July 2012

வெங்கட்பிரபுவின் பிரியாணியில் கார்த்தியுடன் ஜோடி போடும் ரிச்சா.





 மங்காத்தா' படத்தினை அடுத்து வெங்கட்பிரபு 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனத்திற்காக படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. அதனை வெங்கட்பிரபுவும் உறுதிப்படுத்தினார்.

சூர்யா தான் நாயகன் என்ற நிலைமாறி தற்போது கார்த்தி நாயகனாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு 'பிரியாணி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் caption வரிகளாக 'A VENKAT PRABHU DIET' என வைத்திருக்கிறார்கள்.

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'பிரியாணி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் " பிரியாணி படத்தில் எனது முந்தைய படங்களில் பணியாற்றிய அதே குழுவான யுவன், ப்ரிவீன், ஸ்ரீகாந்த், சக்தி சரவணன், வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
அவர்கள் அனைவரையும் அழைத்து இன்று எனது 'பிரியாணி' படத்தின் கதையினை கூறினேன்.
'பிரியாணி' படம் வெஜ் மற்றும் நான் - வெஜ் பிரியர்கள் இருவருக்குமே பிடிக்கும் " என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகியாக சமந்தா பேசப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து இலியானா, ப்ரணீதா சோப்ரா என்று பேச்சு வார்த்தை நடத்தி, தற்போது ரிச்சாவை நாயகியாக ஒபப்ந்தம் செய்து இருக்கிறார்களாம்.
படத்தில் வேறு யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது வரும் வாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் வெங்கட்பிரபு.

No comments:

Post a Comment