Tuesday 3 July 2012

அமீர் தாடி வளர்ப்பது கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிக்கவே: உடையுது ரகசியம்!


கொழுத்திப் பொடுறதுக்குன்னே கோடம்பாக்கத்துல நெரும்பும் கையுமாக பலர் அலைவார்கள் போலிருக்கிறது!
யாருமே எதிர்பார்க்கத ஒரு தருணத்தில் பெப்சி தேர்தலில் நின்று பெப்சி தலைவராக ஜெயித்து, தமிழ்பட தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் அமீர், தற்போது தாடி வளர்த்துத் திரிவது, ஜீகாத் என்ற படத்தை இயக்கி நடிக்கத்தான் என்று சொன்னார்கள்!
ஆனால் மந்திரப்புன்னகை படத்தை தொடர்ந்து கரு.பழனியப்பன் இயக்கத்தில் நடிப்பதற்காகவே அமீர் தாடி வளர்த்து வருகிறார் என்கிற உண்மை இன்னும் சில தினங்களில் உடைய இருப்பதாக நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது!

மேலும்  இந்தப் படத்துக்கு ‘ பாண்டிய வம்சம்’ என்று தலைப்பு வைத்திருகிறார் கரு.பழனியப்பன்! இந்தப் படத்தில் அமீருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பவர் ராஜ்கிரன்! இவர் திருமங்கலத்து யானை என்ற படத்தை நடித்து, தயாரித்து இயக்க இருந்த நிலையில், கரு.பழனியப்பனின் கதையில் மயங்கி நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறராம்! கதாநாயகி உள்ளிட்ட டெக்னீஸியங்கள் லிஸ்ட்டை விரைவில் அறிவிக்க இருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்!

No comments:

Post a Comment