Tuesday 3 July 2012

தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நான் எப்பவும் ஸ்பெஷல் - நமீதா பேட்டி!!



I am always special for tamil fans says namithaஎந்த மொழியில் நடித்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு மட்டும் நான் எப்பவுமே ஸ்பெஷல், மச்சான்ஸ் எப்பவும் என்பக்கம் தான் இருப்பாங்க என்று கூறியுள்ளார் நடிகை நமீதா. தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகை என்ற பெருமைக்குரியவர் நடிகை நமீதா. சமீபகாலமாக தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் விளம்பர நிகழ்ச்சி, கடைதிறப்பு என்று அவ்வப்போது ரசிகர்கள் முன் தோன்றி வருகிறார். தெலுங்கு, கன்னடப் படங்களில் படுபிஸியாக இருந்தாலும், தமிழில் ஒரு அசத்தலான கதை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நமீதாவுக்கு உள்ளது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் உள்ள நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை நமீதா தான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த கேள்விக்கு நமீதா பதிலளித்திருப்பதாவது, உண்மையாக இருக்கலாம். ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மச்சான்ஸ் எப்பவும் என்பக்கம்தான் இருப்பாங்க. தெலுங்கு, கன்னடம் என்று வேறு மொழிகளில் நடித்தாலும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நான் எப்பவுமே ஸ்பெஷல். அவங்க எனக்கு கொடுத்துள்ள இடம் உயர்வானது என்றார்.

இதனிடையே தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள்... இதோ என் பதில்.. நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன். ஏன் தெரியுமா.. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை விட்டால் அவரைப் போல நடிக்க ஆளே இல்லை, என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment