Saturday 7 July 2012

சேரன் தயாரிப்பில் நடிகை ரோஹினி இயக்கும் அப்பாவின் மீசை.



பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ரோகிணி. மறைந்த ரகுவரனின் மனைவியாவார். கமலின் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் மூலம் தன்னை பாடலாசிரியராக திரையுலகில் அறிமுகமானார்.

விரைவில் வெளிவர இருக்கும் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்தில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதி இருக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

விளம்பரங்கள், குறும்படங்கள் என திரையுலகில் பல பரிமாணங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டவர் ரோகிணி. தற்போது வெள்ளித்திரையில் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

ரோகிணி இயக்குனராக அறிமுகமாகும் படத்தினை இயக்குனர் சேரன் தனது நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்து இருக்கிறார்.

படத்தின் தலைப்பு 'அப்பாவின் மீசை!'

No comments:

Post a Comment