Tuesday 3 July 2012

பூலோகத்தில் நிமிர்ந்து நிற்கும் ஜெயம்ரவி!


ஆதிபகவன் படத்தில் இன்னும் நடித்து முடிக்காத ஜெயம்ரவி, அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற இருக்கும் சண்டைக்காட்சியில் நடிக்க நீத்து சந்திராவுக்காக காத்திருக்கிறார்.
முதன் முறையாக இந்தப்படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஜெயம்ரவி, ஆகையால் தான் படம் தாமதமாகிறது என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஆதிபகவான் நிற்பதற்கு கதாநாயகி மீது பழியைப் போட்டிருக்கிறார்கள். என்றாலும் ஆதிபகவானில் தாடி வைத்து நடிக்கும் கதாபாத்திரத்தின் எல்லா காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதால் ஜெயம்ரவி தற்போது மொழு மொழுவென்று முகத்தை ஷேவ் செய்துவிட்டார்!

ஜெயம்ரவி இப்படி தாயாரானதும் அடுத்தடுத்த படங்களில் உடனடியாக நடிக்க கிளம்பிவிடுவார் என்றார்கள்! தற்போது அதை உண்மையாக்கி இருகிறார் ஜெயம்ரவி! ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கும் ‘பூலோகம்‘ படத்திலும் சமுத்திரக்கனி இயக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்திலும் மாறிமாறி நடிக்க இருக்கிறார் ஜெயம்ரவி.
பூலோகம் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடி  த்ரிஷா. நிமிர்ந்து நில் படத்தில் அமலா பால்! பூலோகத்தில் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஜெயம்ரவி நிமிந்து நில் படத்தில் வன்முறைக்கு எதிரான இளைஞராக நடிக்கிறாராம்! நிமிர்ந்து நில் நாளை முதல் தொடர்ந்து 20 நாட்களுக்கு முதல் கட்ட படப்பிடிப்பு நடத்தப் படுகிறது!

No comments:

Post a Comment