Monday 2 July 2012

மூன்று பேர் மூன்று காதல் : மீண்டும் ஒரு புது முயற்சி என்கிறார் இயக்குனர் வசந்த்


 கேளடி கண்மணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் காலடிப் பதித்தவர் இயக்குனர் வசந்த். அதற்குப் பிறகு ஆசை, ரிதம் என்று சமூக ரீதியான படங்களில் வெற்றிகண்டவர். வர்த்தக ரீதியாகவும் படங்களை இயக்கத் தவறவில்லை. ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, சத்தம் போடாதே போன்ற படங்களை வர்த்தக ரீதியாக எடுத்து வெற்றி கண்டவர்.
      ஆசை திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனர் விருதும், சத்தம் போடாதே படத்திற்கு சிறந்த கதாசிரியர் விருதும் வாங்கியவர். இப்போது இவர் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம், 'மூன்று பேர், மூன்று காதல்'. மூன்று பேர், மூன்று காதல் படத்தில், அர்ஜுன், சேரன், விமல் ஆகியோர் நடிக்கிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் இத்திரைப்படம் பற்றி வசந்த் இப்படி சொல்கிறார். 
இந்த படத்திற்கு ஹீரோயினாக நடிக்க  ரெண்டு பேரை மும்பையிலிருந்து புதுமுகமாக அறிமுகப் படுத்தறோம். தலைப்பைப் பார்த்தாலேத்  தெரியும், இது காதலை மையமாகக் கொண்ட படம். காதலை நான் எப்படிப் பார்க்கிறேன், சமூகத்திற்கு முக்கியமான ஒரு விஷயமான காதல் எப்படிப் பார்க்கப் படுகிறது என்பதெல்லாம், சொல்லியிருக்கிறேன். 
மூன்று பேருக்கும் தனிதனிக் காதலா, இல்லை ஒரே காதலா என்பதெல்லாம் சஸ்பென்ஸ். புதுமையாக முயன்றிருக்கிறேன் என்பது உண்மை. படத்தில் ஆறு பாடல்கள். யுவன் ஷங்கர் ராஜாதான் இசை. தி பெஸ்ட் என்று சொல்வார்களே. அப்படித்தான்  ஆறு பாடல்களையும் யுவன் கொடுத்திருக்கிறார்.
       திருவனந்தபுரம், நாகர்கோயில் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்டுக்குப் பின் வெளிவரும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக  இருக்கும்.

No comments:

Post a Comment