பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பரதேசி. இந்தப் படத்தில் அதர்வா முரளி, வேதிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். அண்மையில் குற்றாலத்தில் நடந்த படப்பிடிப்புடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
பரதேசி திரைப்படத்தை மிக குறுகிய காலத்தில் பாலா எடுத்து முடித்துள்ளார். 80 நாள்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். எரியும் தணல் என்ற நாவலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்துக்கு ஜி.பி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இயக்குனர் பாலா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணையும் முதல் படம் என்பதால் இசை குறித்த எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் படத்தின் ரிலீஸ தேதியை விரைவில் எதிர்பார்க்கலாம்.
பரதேசி திரைப்படம் பாலா இயக்கத்தில் உருவாகும் ஆறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment