Sunday 5 August 2012

போக்கிரிக்கு அடுத்து விஜய்,அசின்,பிரபுதேவா மீண்டும் இணைகின்றனர்.



விஜய் 'துப்பாக்கி' படவேலைகளுக்காக மும்பை சென்று இருந்தார். அப்போது பிரபுதேவா வீடு அருகில் இருக்கும் தகவல் தெரிய வந்தது. உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்றார். விஜய் வந்த விவரம் அறிந்ததும் அசினும் அங்கு சென்றார். மூவரும் விருந்து சாப்பிட்டபடி நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.


ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் விஜய், அசின் ஜோடியாக நடித்தனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே மீண்டும் மூவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது பற்றி பேசியதாக கூறப்படுகிறது.

பிரபுதேவா இந்தியில் தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார். அசினும் இந்தியில் நடிக்கிறார். தமிழ் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கி அதில் விஜய், அசினை ஜோடியாக நடிக்க வைப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment