இந்த நிலையில் எஸ்.ஏ.சிக்கு எதிர் அணியினர் மீண்டும் கொடிபிடிக்கத் தொடங்கி உள்ளனர். ஆகஸ்ட் 4ம் தேதி மாலை சங்கத்தில் கூடிய எதிர்ப்பு அணியினர் பெப்சி அமைப்புடன் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை முடிக்கவில்லை, சங்கத்தின் உதவிகள் பாரபட்சத்துடன் வழங்கப்படுகிறது, வரசெலவு கணக்குகள் முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் உடனடியாக பொதுக்குழுவை கூட்டி இதுபற்றி விவாதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்துக்கு ஆதராக 212 தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகர் அணியினர் கூறும்போது. "சங்கத்தின் பணிகள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளோம். சங்கத்தில் கடந்த காலத்தில் ஏராளமான போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவற்றை கண்டறிந்து வருகிறோம். இதுவரை 120 போலி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் அதுபற்றி முறையாக அறிவிக்க இருக்கிறோம். அந்த போலி உறுப்பினர்கள்தான் இப்போது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் பிரச்சினையை கிளப்புகிறார்கள். அவர்கள் அமைதியாக இருக்காவிட்டால் மீண்டும் நீதிமன்றம் செல்ல தயங்க மாட்டோம்" என்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் அதிகார மோதல் எப்போதுதான் முடிவுக்கு வருமோ என்பதுதான் சங்க உறுப்பினர்களின் கவலையாக இருக்கிறது.
No comments:
Post a Comment