Saturday 11 August 2012

ஒரே ஹோட்டலில் அஞ்சலியுடன் சுந்தர் சி நெருக்கம். அதிர்ச்சியில் குஷ்பு



சுந்தர்.சிக்கும் அஞ்சலிக்குமான நட்புதான் இப்போது லேட்டஸ்ட் ஹாட் ஆப் தி சினிமா. ஆயுதம் செய்வோம் படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து நடித்தார் அஞ்சலி. அப்போதே இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி முதன் முறையாக கிளாமராக நடித்ததும் அந்தப் படத்தில்தான்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான கலகலப்பு படத்தில் நடித்தார். இந்தப் படம்தான் அஞ்சலியை கமர்ஷியல் ஹீரோயினாக்கியது. இப்போது மீண்டும் சுந்தர்.சி இயக்கும் எம்.ஜி.ஆர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் வெளிப்புற படப்பிடிப்பில் ஹோட்டலில் சுந்தர்.சியும், அஞ்சலியும் அடுத்தடுத்த அறையில் தங்கியிருந்தார்கள்.

இருவரும் ஒரே காரில் படப்பிடிப்புக்கு வருகிறார்கள். ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அஞ்சலி நடிக்கும் காட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்கிறார். இருவருக்கும் நெருக்கமான நட்பு என்று ஏகத்துக்கு பரபரத்து கிடக்கிறது. இதுபற்றி சுந்தர்.சியிடம் கேட்டால். ரெண்டு பெண் குழந்தைக்கு அப்பாங்க என்னைப்போய் இப்படி சந்தேகப்படுறீங்களே என்கிறார். அஞ்சலியிடம் கேட்டால் இந்த மீடியாகாரங்களே இப்படித்தான். என்னைப் பற்றி எனக்கு தெரிந்ததை விட மீடியாக்காரங்களே அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிறார். இதுகுறித்து குஷ்பு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.




ஒரு விஷயம் மட்டுமே இங்கே கவனிக்கத்தக்கது. இருவருமே எங்களுக்குள் எந்த உறவு இல்லை. நாங்கள் அண்ணன்-தங்கை மாதிரி என்று ஹன்சிகா மாதிரியோ, டாப்ஸி மாதிரியோ சொல்லவில்லை.

No comments:

Post a Comment