ஒரு படத்திற்கு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 9 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்த அங்காடி நகை, ஒரேயடியாக தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். இப்போது அவருடைய சம்பளம் ரூ.25 லட்சமாம். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த ‘கலகல’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதையே சம்பள உயர்வுக்கு காரணம் காட்டுகிறாராம் அம்மணி. இனி அடுத்து வரும் படமும் வெற்றி பெற்றால் அம்மணியின் சம்பளம் ரூ.50 லட்சம் ஆகிவிடுமோ என சினிமா தயாரிப்பாளர்கள் பயந்துபோய் இருக்கிறார்களாம்.
பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தவர் அந்த ‘ரண்’ நடிகை. மார்க்கெட் இழந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. வில்லனுக்கு ஆசை நாயகியாக நடிக்கிற அளவுக்கு இறங்கிவிட்ட அவர், தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பு வருகிறார். ஒரு பாடலுக்குக்கூட ஆடத் தயார் எனவும் பின்குறிப்பில் எழுதி அனுப்பி வருகிறாராம்.
No comments:
Post a Comment