Monday 9 July 2012

கவர்ச்சியாக நடிக்க ஹீரோயின்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் : பூமிகா!


Heroines are forced to act as glamour says bhumika      தமிழில் ரோஜாகூட்டம், பத்ரி,‌ சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பூமிகா. தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு பரத்தாகூர் என்ற யோக மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்ட பூமிகா, இப்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து பூமிகா கூறியுள்ளதாவது, திருமணத்திற்கு பிறகும் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான் தான் நடிக்கவில்லை. இப்போது மலையாளத்தில் "ஏப்ரல் ஃபூல்" என்ற படத்தில் நடித்து வருகிறேன். நிறைய படங்களில் ஏனோ தானோ என்று நடிப்பதை விட, நல்ல கதையம்சம் கொண்ட சில படங்களில் நடிப்பது நல்லது என்றார். மேலும் சினிமாவில் எப்பவும் ஹீரோக்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஹீரோயின்களை கவர்ச்சியாக காட்ட நீச்சல் உடை போன்றவைகளில் நடிக்க அவர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள், ஆனால் ஹீரோக்களுக்கு அப்படி எந்த நிர்பந்தமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment