சமீபத்தில் சென்னையில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருதுகள் விழாவிற்கான பார்ட்டியில் நடந்த சண்டை தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் மகத்தும், மனோஜும் டாப்ஸிக்காக அடித்துக்கொண்டனர் என்பதே டைட்டில் கார்ட்.
ஆனால் உண்மை அது இல்லையாம். நடிகர் மனோஜ் ஆரம்ப முதலே டாப்ஸியை தங்கையின் நிலையில் பாவித்து சில உதவிகளை செய்து வந்தாராம். அது ஆந்திராவில் இருக்கும் வரை. டாப்ஸி சென்னை வரும் போதெல்லாம் மகத் டாப்ஸியை பிக்-அப் செய்வது டிராப் செய்வது என்று இருந்திருக்கிறார்.
இந்த செய்தி மனோஜின் டுவிட்டர் பக்கத்தில் தெரியவர, நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மனோஜுக்கு கிடைத்தது தான் அந்த ரகளை பார்ட்டி. தனது ஜிம் நண்பர்களுடன் மகத்தை உதைத்த மனோஜை பார்ட்டியில் இருந்த யாரும் தடுகாத போதிலும் இவர்கள் இருவருக்குள்ளும் சமரசம் செய்துகொண்டிருப்பவர் சிலம்பரசன். மகத்தும் மனோஜும் சிம்புவின் நண்பர்கள். மனோஜ் பல நாட்களாகவே நண்பர் என்றால், மகத் மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடித்ததிலிருந்து நண்பர். இருவரையும் விட்டுக்கொடுக்க முடியாமல் “இரு மச்சான் பேசி தீத்துக்கலாம்” என்ற தோணியில் சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறாராம் சிம்பு.
”ஒரு பொண்ணுக்காக இப்படி சண்டை போடலாமா” என சிம்பு கூறியது தான் ஹைலைட் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். மனோஜின் தங்கை லக்ஷ்மி மஞ்சு டாப்ஸியை டுவிட்டரில் பூடகமாக சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment