Friday 13 July 2012

சூப்பர் என்றார் சூப்பர்ஸ்டார்!




       சமீபத்தில் திரைக்குவந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, படம் பார்க்கும் அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்துகொண்டிருக்கும் படம் ‘நான் ஈ’. ராஜமௌலி இயக்கத்தில் நானி, சமந்தா, சுதீப், சந்தானம் நடித்துள்ள இந்த படத்தின் வில்லன் சுதீப் தான் படம் ரசிகர்களின் ஹீரோவாக இருக்கிறார்.


ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்ட சுதீப்பிற்கு மற்றொரு மகிழ்ச்சியாய் இருப்பது ரஜினிகாந்த், நாகார்ஜூனா, இயக்குனர் ஷங்கர் ஆகியோரின் பாராட்டு தான். ரஜினி படம் பார்த்துவிட்டு சுதீப்பிற்கு ஃபோன் செய்து “ நல்லா நடிச்சிருக்கீங்க தம்பி. வில்லன் கேரக்டர் என்ன மாதிரியே பன்னிருக்கீங்க” என்று கூறினாராம்.


சென்னையில் படம் பார்த்த ஷங்கரும் படம் சூப்பராக இருக்கிறது என்று அங்குள்ள விசிட்டர் நோட்டில் எழுதிவிட்டு சென்றாராம். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரையே பிரம்மிக்க வைத்திருக்கிறது அந்த சின்ன ’ஈ’.

No comments:

Post a Comment