Monday 9 July 2012

ஒய் திஸ் கொல வெறி என்று பாட்டு... இதெல்லாம் பாட்டாங்க...! கங்கை அமரன் ஆதங்கம்!!


gangai amaran slams todays musicஅப்புக்குட்டி, ஸ்வாதி, வைஷாலி, தம்பி ராமையா, பாண்டியராஜன் நடித்துள்ள படம் மன்னாரு. ஜெய்சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு உதயன் இசையமைத்துள்ளார். மொத்தம் நான்கு பாடல்கள். சிறிய இடைவெளிக்குப் பிறகு கிருஷ்ண ராஜுடன் இணைந்து எஸ்பி ஷைலஜா இந்தப் படத்தில் இனிமையான காதல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகம் கொண்ட கங்கை அமரனின் பேச்சு. இசையமைப்பாளர் உதயனின் பாடல்களைக் கேட்டதுமே, இதில் எங்கள் குடும்பத்து இசையின் சாயல் இருக்கிறது. கேட்க மிக இனிமையாக இருக்கிறது, என பாராட்டினார். மேலும் அவர் பேசுகையில், "இன்றைக்கு இசை என்ற பெயரில் என்னென்னமோ செய்கிறார்கள். ஒய் திஸ் கொல வெறி என்ற ஒன்று... இதெல்லாம் பாட்டாங்க... என்னய்யா கொடுமை. இப்போதெல்லாம் ஒரு பாட்டு பாடினாலே போதும்... அல்லது ஒரு பாட்டுக்கு இசையமைச்சாலே போதும்... தலைகால் புரிவதில்லை யாருக்கும். ஆனால் உதயனின் இசையில் இனிமை இருக்கிறது. குறிப்பாக அந்த ஊரையெல்லாம் காவல் காக்கும் பாடலைக் கேட்டவுடன் இந்த இசை நம் குடும்பத்தின் சாயல் கொண்டது என்று தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக வார்த்தைகள் புரியும்படி அருமையாக இசையமைத்துள்ளார்," என்றார்.

No comments:

Post a Comment