Sunday 8 July 2012

நரகத்திலிருந்து மீட்டு சொர்க்கத்தை காட்டியவர் கீதாஞ்சலி! செல்வராகவன்!!


Gitanjali shown me heaven says selvaraghavan        டைரக்டர் செல்வராகவன் தனது 2வது திருமணத்தின் முதலாமாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார். செல்வராகவன் தற்போது இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ஆர்யா, அனுஷ்கா இணைந்து நடிக்கும் இந்த படத்திற்கு அவர் வெளிநாட்டு நிபுணர்களை வைத்து தொழில்நுட்ப பணிகளை செய்து வருகிறார். அதேவேளையில், தனது முதலாமாண்டு திருமண நாள் வந்ததால், படப்பிடிப்பிலேயே அதனை கொண்டாடி விட்டார். இயக்குனர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் வருட திருமண நாளையொட்டி தனது ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்த ஒரு வருடம் எனக்கு மகிழ்ச்சியும், போரானந்தத்தையும் அளித்து உள்ளது. இதற்காக என் மனைவி கீதாஞ்சலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நரகத்திலிருந்த என்னை அவர்தான் மீட்டு, சொர்க்கத்தை காட்டி இருக்கிறார். இந்த அற்புதமான வாழ்க்கையை தந்த மனைவி கீதாஞ்சலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment