Monday 9 July 2012

டாப்ஸியை காதலிக்க போட்டா போட்டி. பிரபல நடிகர்களுக்கிடையே அடிதடி.




  டாப்சியை காதலிக்கும் போட்டியில் நடிகர்கள் மனோஜ் மஞ்சுவும், மகத்தும் ஓட்டல் விருந்தில் ஒருவரோடு ஒருவர் அடித்து சண்டை போட்டுக் கொண்டனர்.

மகத், மங்காத்தா படத்தில் நடித்துள்ளார். மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் வருவான் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகத்துக்கும், டாப்சிக்கும் ஏற்கனவே நெருக்கம் இருந்தது. படப்பிடிப்புக்காக டாப்சி சென்னை வரும்போதெல்லாம் மகத் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காருடன் காத்து நின்று அழைத்து வருவது வழக்கம். இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. தற்போது இவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் மனோஜ் மஞ்சு என்று கூறப்படுகிறது.

மனோஜும், டாப்சியை காதலிக்கிறார். ஐதராபாத்தில் இருவரும் ஒரே வீட்டில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாயின. விழாக்களுக்கும் சேர்ந்தே போகிறார்கள். டாப்சியை தன்னிடம் இருந்து அபகரித்து கொண்டதாக மனோஜ் மீது மகத் ஆத்திரத்தில் இருந்தார். இதனால் அவர்களுக்குள் பனிப்போர் நிலவியது.

இந்த கோபம் ஒட்டல் விருந்தில் வெடித்தது. கடந்த சனிக்கிழமை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் தெலுங்கு, தமிழ், நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர். மது வகைகளும் பரிமாறப்பட்டது. அப்போது டாப்சி விவகாரம் தொடர்பாக மகத், மனோஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

டாப்சியுடன் பேசாதே என ஒருவரையொருவர் எச்சரித்தனர். ஆவேசமாக திட்டவும் செய்தனர். ஒரு கட்டத்தில் மோதல் முற்றியது. மகத் சட்டையை பிடித்து இழுத்து மனோஜ் அடித்து உதைத்தார். பதிலுக்கு மகத்தும் தாக்கினார். விருந்துக்கு வந்திருந்தவர்கள் இருவரையும் பிடித்து இழுத்துச் சென்றனர்.


இதுகுறித்து மகத்திடம் கேட்டபோது, தகராறு நடந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். என் முழுகவனமும் சினிமாவில் இருக்கிறது. மனோஜ் என்மேல் ஏன் கோபமாக இருக்கிறார் என்று புரியவில்லை என்றார்.

ஆனால் மனோஜ் மஞ்சுவின் சகோதரி, லட்சுமி மஞ்சு இருவருக்கும் தகராறு நடைபெறவில்லை என்று மறுத்தார். மகத் எனக்கும், மனோஜுக்கும் நல்ல நண்பர். தகராறு நடந்ததாக கூறப்படும் இடத்தில் நானும் இருந்தேன். மோதல் எதுவும் நடக்கவில்லை என்றார்.

No comments:

Post a Comment