சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாற்றான்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ளன. ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘அயன்’, ‘கோ’ படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். விரைவில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். முழு நீள ஆக்ஷம் படமாக உருவாக இருக்கும் அப்படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சூர்யா, ஹரி இயக்கும் ‘சிங்கம்-2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு லிங்குசாமியுடன் கைகோர்ப்பார் என தெரிகிறது.
சமந்தா ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்திலிருந்தும், ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment