தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல்வேறு துறைகளிலும் அவதாரம் எடுத்து பெயரெடுத்தவர் பிரபுதேவா. தமிழில் திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா தற்போது இந்தியிலும் கலக்கி கொண்டிருக்கிறார். அவர் இயக்கத்தில் அக்ஷயக் குமார் நடிப்பில் இந்தியில் வெளியான ரவுடி ரத்தோர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி பிரபுதேவாவை இந்தி திரையுலகில் உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகளும் அவரை தேடி வந்த வண்ணம் உள்ளது, இதனால் பிரபுதேவா மும்பையிலேயே தங்கி, அடுத்த படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் மும்பையில் வீடு பார்த்து வந்த நிலையில், ஸ்ரீதேவி தனது கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் குடியேறும்படி பிரபுதேவாவை கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்ட பிரபுதேவா விரைவில் ஸ்ரீதேவி வீட்டில் குடியேறுகிறார்.
No comments:
Post a Comment