திருமணம் ஆனாலும் அதன்பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். தமிழில் தோனி, ரத்தசரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இப்போது அஜ்மலுடன் வெற்றிச்செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ருத்ரன் இயக்கி வரும் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா ஆப்தே, தமிழில் நான் நடிக்கும் 3வது படம் வெற்றிசெல்வன். இப்படத்தில் வித்தியாசமாக வக்கீல் கேரக்டரில் நடித்து வருகிறேன். இப்படத்தில் சமுதாயத்திற்கு தேவையான ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள படம் இது. விரைவில் எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவருடன் எனக்கு நிச்சயமாகியுள்ளது. திருமணம் ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். தமிழில் நல்ல நல்ல கேரக்டர்கள் தேர்வு செய்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment