எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் படம் இசை. முந்தைய படங்களில் இயக்குனர், நடிகர் என இரண்டு பணிகளை செய்து வந்த எஸ்.ஜே, இந்தப் படத்தில் தற்போது மூன்றாவதாக ஒரு பொறுப்பை ஏற்றுள்ளார். அதுவேறு ஒன்றுமில்லை இசையமைப்பாளர் பணிதாங்க. இசை படத்தின் மூலம் நடிப்பு, இசை மற்றும் இயக்குனர் என மூன்று பணிகளுக்கு முதன் முறையாக பொறுப்பேற்றுள்ளார்.
படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறுகையில் இசை திரைப்படம், சினிமா தொடர்புடைய கதை என்றார். அதுமட்டுமின்றி படத்தில் நான்கு இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதில் இயக்குனர் விஸ்வநாதன் ஒரு ரோலில் நடிப்பதாகவும் மற்ற இயக்குனர்கள் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் இசை படத்தின் ஒரு பாடலில் இந்தி நடிகை ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment