Wednesday 20 June 2012

கௌதம் மேனன் படத்தில் ரிச்சா!


இயக்குனர் கௌதம் மேனன் தனது அடுத்த தயாரிப்பாளர் பயணத்தை துவங்கிவிட்டார். தான் இயக்கும் படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்யத் துவங்கியுள்ள கௌதம் மேனன், தான் தயாரிக்கும் படங்களையும் மூன்று மொழிகலிலும் தயாரிக்கிறார். அடுத்ததாக கௌதம் மேனன் தயாரிப்பது ’தமிழ்ச்செல்வனும் தஞ்சாவூர் அஞ்சலும்’ என்ற படம் தான். வேட்டை மன்னன் படத்தில் சிம்புவுடன் நடித்துக்கொண்டிருக்கும் ஜெய் தமிழில் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கிறார். நாயகித் தேர்வு கொஞ்சம் இழுத்துக்கொண்டே போனாலும், மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்த ரிச்சா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ரிச்சாவோ தெலுங்கில் நான் நடிக்கிறேன், தமிழில் நடிப்பது பற்றி இதுவரையில் எந்த முடிவும் செய்யப்படவில்லை எனக் கூறிவருகிறார்.

No comments:

Post a Comment