Saturday 23 June 2012

அனன்யாவும் இப்போ ரெட்டைவால்!


 
பிரியாமணி நடித்துவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் பற்றி ‘சாருலதா’ படம், தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் செல்வராகவன் இயக்கிவரும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் புதிதல்ல என்றாலும் கல்யாண சர்ச்சையில் மாட்டி இன்னும் விழி பிதுங்கித் தெரியும் நம்ம விழியழகி அனன்யாவுக்கு புதிதோ புதிது! கல்யாண விவகாரத்தை நினைத்து மூளையில் உடகார்ந்து இருந்தால் சரியாக வராது என்று எண்ணிய அனன்யா, மூலையில் முடங்கிக் கிடக்காமல் பழையபடி நடிக்க வந்து விட்டார். ஆனால் இம்முறை இரட்டை வேடம்! 

நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்த அனன்யாவுக்கு சீடன் செல்லாக்காசாகிவிட்டாலும், தமிழில் ஜூனியர் ஜோதிகா  என்றே உருகினார்கள் ரசிகர்கள் இவரிடம்! சீடனுக்குப் பிறகு தொடந்து நடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில்தான் திருவனந்தபுரம் தொழிலதிபர் ஆஞ்சநேயனுடன் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. “ திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்’ என்றும் சொன்னார் அனன்யா!
 
ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதால் அனன்யா குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆரம்பத்தில் ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என ஒற்றைக் காலில் நின்ற அனன்யா, தற்போது பின்வாங்கி விட்டார். மீண்டும் நடிக்க அனன்யா சின்னதாய் ஒரு போட்டோ சூட் நடத்தியதுதான் தாமதம், இயக்குநர்கள் மீண்டும் அவர் வீட்டுக் கதவை பணப்பெட்டிகளோடு  தட்ட, முதல் ரீஎண்ட்ரி படமாக மலையாளத்தில் ‘ரத்தா ராஷா’ என்ற 3டி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.
 
கல்லூரி மாணவரி, மோகினிப் பேய் என இதில் அனன்யாவுகு இரட்டை க் கதாபாத்திரங்கள்!  ஏற்கனவே விழிகளால் மிரட்டும் அனன்யாவை மோகினிப் பேயாக 3டியில் பார்த்த பிறகாவது அஞ்சனேயன் பயந்து ஒதுங்குவார் என்று நம்பலாமா?

No comments:

Post a Comment