பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ப்ரியாமணி. அந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.
இந்த முறையும் அவர் சவால் அளிக்கும் வேடங்களையே ஏற்றுள்ளார். கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர் பொன்குமரன் இயக்கும் "சாருலதா' படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் வேடத்தில் நடிக்கிறார் ப்ரியாமணி. இந்தப் படம் தனக்கு மேலும் ஒரு தேசிய விருதை பெற்றுத் தரும் என்கிறார் அவர்
No comments:
Post a Comment