Thursday 21 June 2012

எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை திரைக்கு வருகிறது கார்த்தியின் சகுனி!


      நாளை தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகிறது 'சகுனி'. பரபரப்புக்கு கார்த்தி, பளபளப்புக்கு ப்ரணீதா என்றால்
கலகலப்புக்கு சந்தானம். கைக்கலப்புக்கு பிரகாஷ் ராஜ், நாசர், கோட்டா சீனிவாசராவ், அதிரடிக்கு ராதிகா. இவர்கள் மட்டுமல்ல ரோஜா செல்வமணி, கிரண் ரத்தோட், ஆகாஷ், நரேன், டெல்லி கணேஷ், வி.எஸ்.ராகவன், மீரா கிருஷ்ணா என அணிவகுக்கிறது நட்சத்திர படையெடுப்பு.
இயக்குனர் ஷங்கர் தயள், ஐம்பது படங்களுக்கு பிறகு ஒரு நடிகருக்கு கிடைக்கும் வாய்ப்பும், நடிப்பதற்கான தளமும் தனக்கு சகுனி எனும் ஒரே படத்தில் வழங்கிவிட்டதாக பூரிக்கிறார் கார்த்தி.
பிரணீதாவுக்கு சகுனி தமிழில் இரண்டாவது படம். சகுனி அனுபவம் என்றவுடன், கார்த்தியை புகழ்ந்துவிட்டுத்தான் மறுபேச்சு பேசுகிறார். இந்த படம் என்னமோ அரசியல், ஆக்ஷன் என இருந்தாலும், தென்றல் தழுவும் பூங்காவில் ஜாலியாக மகிழ்ச்சியாக உலாவி வந்தது போல் தான் இருந்தது என்கிறார் முகத்தில் பூரிப்பு தெறிக்க.

ராதிகா இப்படத்தில் கந்துவட்டிகாரியாக வருகிறார். இந்த கதையை இயக்குனர் சொன்ன போதே பெரிய அளவில் வரும் என்று உள்ளுணர்வு சொன்னது. அதன்படியே என் கேரக்டர் வந்துள்ளது என்கிறார்.

முதன் முதலாக எனது இசைக்கு அரசியல் முலாம் பூசப்பட்டிருப்பது புது அனுபவம் என்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஸ்டண்ட் மாஸ்டர் அணல் அரசு. நான் மகான் அல்ல படத்தில் இருவரும் இனைந்து மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தில் வரும் ரஜினி, கமல் சிறீதேவி பாத்திர சித்தரிப்பு ரசிக்கப்படும் கற்பனையாக இருக்கும் என்கிறார்கள் உறுதியாக. சென்சார் போர்டு அஜித்தின் பில்லா 2 வுக்கு UA சான்றிதழ் கொடுக்க மறுத்ததால் கடுப்பாகி போன இயக்குனர் சக்ரா டொலெடி அந்த காட்சிகளை மீண்டும் ஷீட்டிங் எடுக்க புறப்பட்டுவிட்டார் எனவும் அதனால் ரிலிஸ் திகதி தள்ளிப்போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்தன.

இதனால் சகுனி ஒரு வாரத்திற்கு மேல் தன்னந்தனியாக பாக்ஸ் ஆஃபிஸை கலக்க போகிறதென்பது மட்டும் உறுதி.

No comments:

Post a Comment