Wednesday 20 June 2012

நடிகர் பாண்டியராஜனின் மகன் விபத்தில் படுகாயம்


நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரேம் ராஜன் (19). இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் படித்து வருகிறார். இவரது நண்பர் பாரத் (18). இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு புறப்பட்டனர். மத்திய கைலாஷ் பகுதியில் சென்றபோது முன் பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தது. இதில் பிரேம்ராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பாரத்தின் கால் உடைந்து போனது. இருவரும் பெருங்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பிரேம்ராஜன் தலையில் 18 தையல் போடப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment