Thursday 21 June 2012

குடிபோதையில் கார் ஓட்டிய, பிரபல நடிகர் மீது வழக்கு.


குடிபோதையில் கார் ஓட்டிய, கன்னட நடிகர் திகந்த், "கால் சென்டர்' ஊழியர் மீது, மோதி விபத்தை ஏற்படுத்தியதால், நடிகர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பெங்களூரு, பிரேசர் டவுனை சேர்ந்தவர், "கால் சென்டர்' ஊழியர் சையத் ஜியான். இவர், தன் பணியை முடித்து கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பெங்களூரு மில்லர்ஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அதே ரோட்டில் சென்ற கன்னட நடிகர் திகந்த்தின் கார், சையத்தின் வாகனம் மீது மோதியது. இதில் ஜியான் சுய நினைவின்றி கீழே விழுந்தார். வாகனம் சேதமடைந்தது. குடிபோதையிலிருந்த திகந்த், பதட்டத்துடன் காரிலிருந்து இறங்கி, தன் பெயர் ஆகாஷ் என்றும், வாகன சேதத்துக்கு இழப்பீடு தருவதாகவும் சையத்திடம் கூறினார். சம்பவம் நடந்த மறுநாள், நடிகருக்கு போன் செய்த போது, அவர் முறையாக பதிலளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, நடிகரின் மானேஜர், சையதை தொடர்பு கொண்டு, 4,000 ரூபாய் இழப்பீடு தருவதாக கூறினார். வண்டியை ரிப்பேர் செய்ய, 15 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று சையத் கூறியுள்ளார். அவ்வளவு தொகை கொடுக்க முடியாது. என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று நடிகர் கோபமாக கூறியதால், நடிகர் மீது, சிவாஜி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகர் திகந்த், 2009ம் ஆண்டு மைசூரு ரோடு கோபாலன் மால் அருகே, குடிபோதையில் கார் ஓட்டி வந்த போது, சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவரை தடுத்தி நிறுத்தி, எச்சரித்து அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment