Thursday 21 June 2012

குத்தியை பச்சையை துப்பட்டாவால் மறைக்கும் நயன்தாரா!


Nayanthara just can’t get rid of Prabhu Deva’s nameநயன்தாரவும், பிரபுதேவாவும் காதலில் விழுந்து, அதனால் பிரபுதேவா மனைவி கோர்ட் வரைக்கும் சென்றதும், அதன் பிறகு நயன்தாரா, பிரபுதேவா காதலில் இருவரும் பிரிந்ததும் பழைய கதை. காதலில் பிரிந்தது தொடர்பாக இருவரும் தங்கள் பக்க நியாயங்களை கொட்டி வருகின்றனர். இருவரும் பின்னிப் பிணைந்தபோது, பிரபுதேவாவின் பெயரை இடது கையில் பச்சை குத்தி தன் நெருக்கத்தை உலகுக்கு காட்டினார் நயன். இப்போது இருவரும் பிரிந்ததால் அந்த பச்சை ரொம்பவே படுத்துவதால் அதை அழிக்க நயன்தாரா முயற்சி செய்து வருவதாகவும், அறுவை சிகிச்சை செய்து அழிப்பதற்காக பாங்காக் சென்று வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார்.

இந்நிலையில் அண்மையில் ஐதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அப்போது அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்களாம். ஆனால் அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றாராம்.

No comments:

Post a Comment