"களவாணி படத்தில் கண்ணியமாக நடித்த ஓவியா, "கலகலப்பு படத்தில் ஒரு பாடலில், அஞ்சலியுடன் இணைந்து அயிட்டம் நடிகைகளே அசந்து போகும் அளவுக்கு அதிரடி ஆட்டம் போட்டார். அவரிடத்தில், "இந்த கவர்ச்சி ஆட்டம் குத்தாட்டமாக மாறுமா? என கேட்டதற்கு, "ஒரு காலத்தில் அயிட்டம் பாடல்களுக்கென்று நடிகைகள் இருந்தனர். ஆனால், இப்போது கதாநாயகிகளையே அந்த மாதிரி பாடல்களுக்கு ஆட வைக்கின்றனர். இது காலத்தின் மாற்றம். அதனால் தான், அந்த பாடலில் ஆட சம்மதித்தேன். அதற்கு நல்ல பெயரும் கிடைத்தது."ஆனால், நான் நாயகியாக நடிக்காத படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடுவேனா என கேட்டால், அது எந்த மாதிரி நடிகர்களுடன் ஆடும் வாய்ப்பு என்பதை பொறுத்து முடிவெடுப்பேன். குறிப்பாக, விஜய், அஜீத், சிம்பு மாதிரியான பிரபல ஹீரோக்களுடன் நடனமாடும் வாய்ப்புகள் என்றால், எந்த ஆட்சேபனையும் இல்லை. உடனே அதிரடி ஆட்டத்துக்கு ஆயத்தமாகி விடுவேன் என்கிறார் ஓவியா.
No comments:
Post a Comment