Friday 22 June 2012

ஆர்யா-ஜீவா அதிர்ச்சி போட்டு உடைத்த பிரதர்


Arya - Jeeva    நட்பென்ற மூழ்காத ஷிப்புகளில் முடிஞ்சளவுக்கு ஓட்டையை போடுவதுதானே இல்லத்தரசிகளின் இனிய பணியாக இருக்கும்? அப்படியொரு பொற்ற்ற்ற்ற்றாமையில் ஈடுபட்டு ஒரு புராஜக்டையே பலி கொடுத்திருக்கிறார் திருமதி ஜீவா. (நம்ம நடிகரு ஜீவாவோட லகான்தாங்க)

ஆர்யா, ஜீவா, சந்தானம் நடிக்க ஒரு புதிய படத்தை உருவாக்க நினைத்தார்கள்நண்பர்கள். ஆர்யாவும் ஜீவாவும் அப்படியொரு திக்னஸ் என்பதுதான் ஊருக்கெல்லாம் தெரியுமே! இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தாராம் ஜித்தன் ரமேஷ். இவர் ஜீவாவின் சகோதரர் அல்லவா?

என்னதான் பிரண்ட்ஷிப், சொந்தம் என்றாலும் சம்பளம் தராவிட்டால் கதை நடக்குமா? இங்குதான் பிரச்சனை ஆரம்பம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து சில்வண்டுகள். ஜீவாவை விட ஆர்யாவுக்கு கொஞ்சம் கூடுதல் சம்பளத்தை கொடுத்துவிட்டாராம் ரமேஷ். மார்க்கெட் நிலவரப்படியே ஆர்யாவின் கைதான் உச்சம் என்பதால்தான் இப்படி.

இதை கேள்விப்பட்ட ஜீவாவின் மனைவி, 'அப்ப நீங்க என்ன டம்மி பீஸா? இந்த படமே வேணாம். விட்டு தள்ளிட்டு வாங்க' என்று சீற, மனைவி சொல்லே மந்திரம், மற்றதெல்லாம் தந்திரம் என்று புராஜக்டிலிருந்தே விலகிவிட்டாராம் ஜீவா.

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே?

No comments:

Post a Comment