பிரகாஷ்ராஜின் தோனி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்று பெயரெடுத்த அவர் தற்போது ருத்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் வெற்றிச்செல்வன் படத்தில் அஜ்மல் ஜோடியாக நடித்து வருகிறார். சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. வக்கீல் வேடத்தில் நடித்து வரும், ராதிகாஆப்தே, தனது நடிப்பின் மூலம் தனது சிறந்த நடிகைக்கான பாராட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதற்கிடையே அவர் காதல் திருமணம் செய்யஇருப்பதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பெனட்டிக் டெய்லரும், நானும் இரு வருடங்களாக காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளோம். எப்போது திருமணம் என்பதை கூற இயலாது என்றார். மேலும் வெற்றிச்செல்வன் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. காதல் காட்சிகளில் மென்மையாகவும், வக்கீல் கேரக்டரில் சீரியசாகவும் எனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன். என்றார்.
இது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பெனட்டிக் டெய்லரும், நானும் இரு வருடங்களாக காதலிக்கிறோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து உள்ளோம். எப்போது திருமணம் என்பதை கூற இயலாது என்றார். மேலும் வெற்றிச்செல்வன் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. காதல் காட்சிகளில் மென்மையாகவும், வக்கீல் கேரக்டரில் சீரியசாகவும் எனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளேன். என்றார்.
No comments:
Post a Comment